உட்கட்சித் தேர்தலை டிசம்பருக்குள் முடிக்க அதிமுக உறுதி..!

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என அதிமுக உறுதி அளித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உட்கட்சித் தேர்தலை டிசம்பருக்குள் முடிக்க அதிமுக உறுதி..!

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என அதிமுக உறுதி அளித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை எனவும் கட்சியின் சட்ட திட்டங்களின் படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் விசாரித்தார். வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், அதிமுகவின் உட்கட்சி தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விடுவதாக அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.