உங்க குரல கேட்டே கர்ப்பம் ஆகிட்டேன்... அண்ணன் - தம்பியிடம் குரலை மாற்றி பேசி லட்சகணக்கில் பணத்தை கறந்த இளம்பெண்...!!

குரலை மாற்றி பேசி அண்ணன் - தம்பியை ஒருசேர ஏமாற்றி பணம் கறந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

உங்க குரல கேட்டே கர்ப்பம் ஆகிட்டேன்... அண்ணன் - தம்பியிடம் குரலை மாற்றி பேசி லட்சகணக்கில் பணத்தை கறந்த இளம்பெண்...!!

சிவகங்கை மாவட்டை சேர்ந்தவர் பாரதிராஜா. இவருடைய பேஸ்புக் கணக்கில் சில மாதங்களுக்கு முன் சந்தியா என்ற பெயரில் இருந்து அழைப்பு சென்றுள்ளது, முதலில் அந்த பெண் பாரதிராஜாவிடம் சகஜமாக பேசி வந்துள்ளார்.

அப்போது சந்தியா தன்னுடைய பெயர் கீர்த்தி ரெட்டி என்றும், தன்னை ஒரு டாக்டர் என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார். நாளடைவில் இருவரும் சாட்டிங்கில் பேசி நெருக்கமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கீர்த்தி ரெட்டி மீது காதல் மோகம் கொண்ட பாரதிராஜா அவரை காதலித்து வந்துள்ளார். இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறம் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். கீர்த்தி ரெட்டியின் சகோதரி நான்தான் என்று கூறி தீக்சி ரெட்டி என்ற பெண் பேஸ்புக்கில் பாரதி ராஜாவின் சகோதரர் மகேந்திரனிடம் பேசி உள்ளார். அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர தொடங்கியுள்ளது.  

அடுத்த வேளையாக இருவரிடமும் காதலை காரணம் காட்டி பணம் கறந்துள்ளார் சந்தியா. இரண்டு பெண்களும் ஒரே ஆள்தான் என்று தெரியாமல் பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோரும் பணத்தை வாரி இறைத்துள்ளனர்.

 அதிலும் ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது, ஆம் பாரதிராஜாவிடம் கீர்த்தி ரெட்டியாக பேசிய வந்த சந்தியா, உங்கள் குரலில் மயங்கியே தான் கர்ப்பன் ஆகி விட்டேன் என்றும் எனக்கு குழந்தை பிறக்க போகிறது மருத்துவ செலவிற்கு காசு கொடுங்கள் என்று கேட்டுள்ளார். காதலியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காத பாரதிராஜா, காதலியின் குரலில் மயங்கி கேட்ட பணத்தை கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் மகேந்திரனிடம் தீக்சி ரெட்டி என்ற பெயரில் பேசி வந்த சந்தியா அவரிடமும் சுமார் 20 லட்சம் வரை வாங்கியுள்ளார். இதில் பெரும் கூத்து என்னன்னா, இரண்டு பேரும் காதலியை நேரில் பார்க்காமலேயே பணத்தை வாரி கொடுத்துள்ளனர் என்பது தான்.

ஒரு கட்டத்தில் தன் காதலியை சந்திக்க சென்றும் முடியாமல் போன விரக்தியில் இருந்த பாரதிராஜா இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை செய்த போலீசார், இருவரையும் காதலிப்பதாக ஏமாற்றி பணத்தை பறித்தது ஒரே பெண் தான் என்பதை கண்டறிந்தனர்.

மேலும் அவர் ஆவடியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், ஐஸ்வர்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.