சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு...

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர்  உயிரிழப்பு...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த வீ.சொக்கலிங்காபுரத்தில் சக்தி அய்யனார் என்பவருக்குச் சொந்தமான சிவசக்தி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு மீனம் பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜன் என்ற முதியவர்  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஆனந்தராஜன் படுகாயங்களுடன் மரத்தில் தூக்கி வீசப்பட்டார். மேலும் ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மரத்தில் இருந்த ஆனந்தராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அப்பகுதி போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயங்கர சத்தத்துடன் இந்த வெடி விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, செய்வதறியாது திகைத்து நின்றனர்.