கோவை: கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுவர்; 4 பேர் உயிரிழப்பு!  

கோவை: கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுவர்; 4 பேர் உயிரிழப்பு!  

கோவை அருகே தனியார் கல்லூரியில் கட்டுமான பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது. 

கோவை மாவட்டம், குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் பிரபல கிருஷ்ணா கல்லூரியின் சுற்றுச்சுவர் கட்டுமான பணி நடைபெற்றது. கல்லூரியில் ஏற்கனவே இருந்த பக்கவாட்டு சுவரை ஒட்டி 10 அடி அளவிற்கு  சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கட்டுமான பணியின் போதே சுவர் இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த 4 பேரில் மூன்று பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் வட மாநில தொழிலாளி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  பருன் கோஸ் என்பவா் சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிாிழந்தாா்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் நோில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், விபத்து தொடா்பாக ஒப்பந்ததாரா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தொிவித்தாா். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும், உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் கல்லூரி ஏதேனும் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.

இதையும் படிக்க:மன நல காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை - உரிமையாளர் கைது..!