தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்து...!

விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தில் தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதி 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம்...!

தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்து...!

கடலூர் மாவட்டம் தொழுதூரில், நாவலர் நெடுஞ்செழியன் தனியார் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சாத்தியம், வேப்பூர்,உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் அந்தக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை வடலூரில் இருந்து ஓட்டுனர் ஞானசேகரன், கல்லூரி பேருந்தில் 50 க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்களை பேருந்தில் ஏற்றிக் கொண்டு சாத்தியம் அருகே மாணவர்களை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி, தனியார் கல்லூரி பேருந்தின் பின்னால் மோதியது. அதில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். அவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவந்தனர். இதில் பாலாஜி என்ற மாணவனுக்கு கைமுறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல மாணவர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.