சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது....

புதுச்சேரியில் சிறுமியிடம் பாலியல்  சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலிசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது....

புதுச்சேரியை வில்லியனூர் கூடப்பாக்கம் பகுதியை  சேர்ந்தவர் பூவரசன். 22 வயதான இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த  13 வயது அரசு பள்ளி  மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவி, அழுதுகொண்டே தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பதறிபோன பெற்றோர் இது குறித்து  வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பூவரசனை புதுச்சேரி கூடப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.