கவர்னர் மாளிகை எதிரே தீ விபத்து!

கவர்னர் மாளிகை எதிரே தீ விபத்து!

கவர்னர் மாளிகையில் குடியரசு தலைவர் இருக்கும் போது தீ விபத்து ஏற்பட்டாதல் பரபரப்பு ஏற்பட்டது.

நான்கு நாட்கள் பயணமாக தமிழகம், புதுச்சேரி வந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கிண்டி ராஜ்பவனில் தங்கியுள்ளார். இந்நிலையில் கிண்டி ராஜ்பவன் ஊழியர்கள் செல்லும் இரண்டாவது நுழைவு வாயில் எதிரே உள்ள காலி இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த இடம் ஆல் இந்தியா ரேடியோவிற்கு (அகில இந்திய வானொலிக்கு) சொந்தமான இடமாகும். திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ராஜ்பவனில் இருந்த தீயணைப்பு துறையினர்
தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குப்பைகள் தீ பிடித்து எரிந்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே தீயை அணைத்தனர்.

இதையும் படிக்க:”பாரதியாரின் சொல்லுக்கேற்ப இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கோலோச்சி இருக்கிறார்” - முக. ஸ்டாலின்..