தமிழகத்தில் தமிழ் பாடத்தில் 100 - 100 மதிப்பெண் பெற்று மாணவி சாதனை!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடத்தில் மாணவி ஒருவர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் தமிழ் பாடத்தில் 100 - 100 மதிப்பெண் பெற்று மாணவி சாதனை!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் திருச்செந்தூர் அருகே உள்ள காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் துர்கா என்ற மாணவி 500க்கு 448 மதிப்பெண் பெற்றுள்ளார். 

இதில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவியின் தந்தை ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். மாணவியை பள்ளி ஆசிரியர்கள், குடும்பத்தினர் பாராட்டினர், பின்னர் மாணவிக்கு பள்ளி முதன்மை முதல்வர் செல்வ வைஷ்ணவி பரிசு கோப்பை வழங்கினார்.

இது குறித்து மாணவி துர்கா கூறியது.... முதல் மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள், குடும்பத்தினர், உடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆங்கில வழி கல்வியில் பயின்ற மாணவி தமிழ் பாடத்தில் முதல் இடம் பெற்றிருப்பது தனி சிறப்பை பெற்றுள்ளது.