நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுக்க வேண்டும்...!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுக்க வேண்டும்...!!!

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதன் மூலம், கார்ப்பரேட்டுக்காக பாஜக அரசு செயல்படுகிறது என்பது நிரூபணமாகியுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், கேஸ் சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு  கண்டனம் தெரிவித்துள்ளார்.   மேலும் அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.  

தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியானது  திமுக அரசின் சாதனை திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  அலைபாயுதே படப்பாணி 2கே காதலர்கள்... காவல்துறை செய்தது என்ன?!!