15 பேரை கடித்து குதறிய வெறிநாய்.... அடித்து கொன்று புதைத்த பொதுமக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள கோட்டையூர் கிராமத்தில் 15 பேரை கடித்து குதறிய வெறிநாயை பொதுமக்கள் துரத்தி சென்று அடித்து கொன்று புதைத்தனர்.

15 பேரை கடித்து குதறிய வெறிநாய்.... அடித்து கொன்று புதைத்த பொதுமக்கள்

தேன்கனிகோட்டை அருகேயுள்ள கோட்டையூர் கிராமத்தில் நாய்கள் பெருக்கெடுத்து கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் கூட்டத்தில் வெறி பிடித்த தெருநாய் ஒன்று சாலையில் செல்வோரை துரத்தி துரத்தி கடித்து வந்தததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இந்த வெறி நாயானது, கோட்டையூரில் உள்ள பொதுமக்கள் 15 பேரை கடித்து குதறியது. அதனைதொடர்ந்து நாய் கடித்து படுகாயமடைந்தவர்கள்,  தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயமடைந்ததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் அந்த வெறிநாயை கட்டைகளால் அடித்து கொன்று சாலையோரத்தில் புதைதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.