பாம்பு கடித்த நபர், பாம்புடன் சிகிச்சை பெற வந்ததால் பரபரப்பு :

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தன்னை கடித்த பாம்புடன், சிகிச்சை பெற வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்பு கடித்த நபர், பாம்புடன் சிகிச்சை பெற வந்ததால் பரபரப்பு :

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தன்னை கடித்த பாம்புடன், சிகிச்சை பெற வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த  ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி (64). இவர் இன்று காலை, அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. அவரது அலரல் சத்தத்தை கேட்டு அங்கிருந்த வர்கள் உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.  

பின்னர், தன்னை கடித்த அந்த பாம்புடன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். இதனால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.