ஒருநாள் கால தாமதமா...! இந்திய வானிலை மையம் திடீர் அறிவிப்பு!!

ஒருநாள் கால தாமதமா...! இந்திய வானிலை மையம் திடீர் அறிவிப்பு!!

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில், ஒரு நாள் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென் கிழக்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் மே 7-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதையும் படிக்க : மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?

இந்நிலையில் தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு நாள் கால தாமதமாக மே 8-ம் தேதி உருவாகும் எனவும், இது மே 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.