சென்னையில் புதிய பன்னோக்கு மருத்துவமணை விரைவில்... மருத்துவர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது

சென்னையில் புதிய பன்னோக்கு மருத்துவமணை விரைவில்... மருத்துவர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு அறிவிப்பு!

எலிக்காய்ச்சல் ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனரகத்தில் எலிக்காய்ச்சலை கண்டறியக்கூடிய லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.


அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் டி.எம்.எஸ்.வளாகத்தில் லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்தியாவில் 10 இடங்களில் இந்த ஆய்வகம்  உள்ளது.

தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை எலி காய்ச்சலை கண்டறிய எலிசா என்ற பரிசோதனை உதவியது. இனி எலி காய்ச்சல் நோய் குறித்து கண்டறிய லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் உதவியாக இருக்கும்.

எலி காய்ச்சல் - அறிகுறியும், பாதிப்பும்

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் எலி காய்ச்சல் நோயினால் சிறுநீரகம், நுரையீரல் உள்ளிடவற்றை பாதிக்கும். எலி காய்ச்சலால் தமிழகத்தில் 2018ம் ஆண்டு 2 பேர் மரணம் அடைந்தனர். இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் பேரில் 10 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இட்ட உத்தரவு??

மழைக்காலத்தில் வெறும் காலில் காலணி இல்லாமல் நடந்தால் எலி காய்ச்சல் பாதிப்பு வருகிறது. சிறிய அளவிலான காய்ச்சல், கண் எரிச்சல், கண் சிவத்தல் இவையெல்லாம் எலி காய்ச்சல் அறிகுறி, உடனே சிகிச்சை எடுத்து கொண்டால் பாதிப்பு இருக்காது என்றார் அமைச்சர்.

கால்பந்து வீராங்கனை கால் அகற்றம் 

செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னையில் கால்பந்து விளையாட்டு வீராங்கனை கால் அகற்றம் குறித்தான கேள்விக்கு முறையான சிகிச்சை அளித்தோம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். விசாரணை கமிட்டி அமைக்கபப்ட்டுள்ளது. கவன குறைவால் தவறு நடந்திருந்தால் விசாரணை பின்  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.


கிண்டியில் புதிய பன்னோக்கு மருத்துவமனை

டெங்குவால் தமிழகத்தில் 377 பேர் சிகிச்சையில் உள்ளனர் 2017 - 18 டெங்குவால் உயிரிழப்பு அதிகம் .கடந்த 11 மாதங்களில் 4 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது, டெங்கு பாதிப்பை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். டெங்குவால் தமிழகத்தில் 377 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இதில்  106 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

சென்னை கிண்டி கிங்ஸ் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை பணிகள் அசுர வேகத்தில்  நடைபெற்று வருகிறது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் தெரிவித்தார்.