நைசாக வீட்டு நாயை தூக்கிச்சென்ற சிறுத்தை - சிசிடிவி காட்சியால் மக்கள் அச்சம்!!

நைசாக வீட்டு நாயை தூக்கிச்சென்ற சிறுத்தை - சிசிடிவி காட்சியால் மக்கள் அச்சம்!!

உதகை காந்தல் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று நாயை தூக்கி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதகை காந்தல் குருசடி காலனி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள்:

சிறுத்தை ஒன்று வீட்டு சுவற்றின் மீது ஏறி குதித்து வீட்டில் வளர்க்கப்படும் நாயை லாவகமாக கவ்விக் கொண்டு சென்றது. நாயை தூக்கிச்செல்லும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.