குடிபோதையில் ரகளை....போலீசாரை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்... வீடியோ வைரல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குடிபோதையில் வழக்கறிஞர், காவல்ஆய்வாளரிடம் தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

குடிபோதையில் ரகளை....போலீசாரை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்... வீடியோ வைரல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குடிபோதையில் வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இது தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சீர்காழி காவல்நிலையத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் மீது குடிபோதையில் காரை ஓட்டி பேருந்தில் மோதி விபத்து ஏற்படுத்தியதாக புகார் அளித்தனர்.

அந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு காவல்நிலையம் வந்த வழக்கறிஞர் ராஜேஷ் குடிபோதையில், காவல் ஆய்வாளர், எஸ். பி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியும், அங்குள்ள சக காவலர்களை நீ யார் உன்னை என்ன செய்கிறேன் பார் என மிரட்டியும்  பேசி உள்ளார். இது தொடர்கான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.