முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு முன்பு ஒருவர் தீக்குளித்த சம்பவத்தால் பரபரப்பு...
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு முன்பு ஒருவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில், முதல்வர் ஸ்டாலின் வீடு அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், அவரது வீடு உள்ள பகுதி நோக்கி வந்த நபர், திடுதிப்பென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட போலீசார், தண்ணீரை அவர் மீது ஊற்றி தீயை அணைத்தனர். அந்த நபருக்கு தீக்காயம் ஏற்பட்ட நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அந்த நபர் யார், எதற்காக எதற்காக தீக்குளித்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சம்பவம் அறிந்து, அங்கு விரைந்த தி.நகர் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத், பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களிடம் அதுகுறித்து விசாரித்துள்ளார். பலத்த போலீஸ் பாதுகாவலையும் மீறி நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.