இரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து...! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...!

விருதுநகர் ராமமூர்த்தி சாலை மேம்பாலத்தில் இடதுபுறமாக வந்த ஆட்டோ மீது எதிரே சென்ற கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ மீது  கார் மோதி விபத்து...! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...!

விருதுநகர் நேருஜி நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். இவர் நேற்று மாலை  நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக, விருதுநகர் அரசு மருத்துவமனையில் விட்டுவிட்டு  விருதுநகர் இராமமூர்த்தி சாலையில்  உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது  எதிரே வந்த  கார் திடீரென மோதியது. இந்த விபத்தில் விருதுநகர் அருகே மாந்தோப்பைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முத்து கண்ணன் மற்றும் விருதுநகர் நேருஜி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சண்முகம் ஆகிய இருவரும்  காயமடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து விருதுநகர் கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு விபத்து நடந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.