நீட் தேர்வின் பாதிப்புகள் என்ன...? இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது ஏ.கே.ராஜன் குழு..!

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று அறிக்கையை சமர்ப்பிக்கிறது.  

 நீட் தேர்வின் பாதிப்புகள் என்ன...? இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது ஏ.கே.ராஜன் குழு..!

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவும், எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருன்கிறன. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை தமிழக அரசு நியமித்தது.

இதனையடுத்து, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது. சுமார் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.

இக்கருத்துகளை, அந்த குழு ஆய்வு செய்தது. இதற்கிடையில், ஏ.கே. ராஜன் குழு அமைத்ததை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஏ.கே.ராஜன் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீட் தேர்வின் தாக்கம் குறித்த தங்களது அறிக்கையை சமர்பிக்க உள்ளனர்.