ஆற்றின் தடுப்பணையில் குளிக்க சென்ற 7 பேர்.. தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்!!

கடலூர் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளித்த 6 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆற்றின் தடுப்பணையில் குளிக்க சென்ற 7 பேர்.. தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்!!

அருங்குணம் குச்சிப்பாளையம் அருகே உள்ள தடுப்பணைக்கு 12 வயது சிறுமி உள்ளிட்ட 7 பெண்கள் குளிப்பதற்காக சென்றனர். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு அனைவரும் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் ஒவ்வொருவராக மூழ்கிய நிலையில், உயிருக்குப் போராடி தத்தளித்ததாக தெரிகிறது. சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அனைவரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்தும் சிகிச்சைப் பலனின்றி 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் நேரில் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளார்.