சுற்றுலா வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து... 7 பேர் உயிரிழந்த சோகம்!

சுற்றுலா வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து... 7 பேர் உயிரிழந்த சோகம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே  சுற்றுலா வாகனம் மீது அரசு பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 7 போ் உயிாிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சுற்றுலா வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனம் இரவில் செங்கம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அந்தனூர் கிராமம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த அரசு பேருந்து எதிா்பாராதவிதமாக வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த பயங்கர விபத்தில் சுற்றுலா வாகனத்தில் இருந்த 5 போ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பாிதாபமாக உயிாிழந்தனா். மேலும் 6 போ் படுகாயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவா் உயிாிழந்தனா். மற்றவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இதுகுறித்து அறிந்த  மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்கு சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். 

விசாரணையில் விபத்தில் உயாிழந்தவா்கள் அசாம் மாநிலத்தை சோ்ந்த சுவான், கிஸ்தபா, விஷாஸ், சிப்பான் உள்ளிட்டோா் என்பதும், இவா்கள் வேலைக்காக பெங்களூரு சென்றபோது விபத்தில் சிக்கியதும் தொியவந்தது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் தொடா்ந்து விபத்து நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.