இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை..!

வவுனியாவில் இருந்து 2 குடும்பத்தை சேர்ந்த  7  இலங்கை தமிழர்கள் பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.

இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை..!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி பைபர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். சில நேரங்களில் இங்கு அகதிகளாக வருபவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வவுனியா பகுதியை சேர்ந்த 2  குடும்பத்தை சேர்ந்த  4 குழந்தைகள் உட்பட 7 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர், அவர்களை மீட்ட மரைன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், விசாரணைக்கு பின்னர்  அனைவரையும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு கொண்டு சென்றனர், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு இதுவரை  24 குடும்பத்தை சேர்ந்த  90 அகதிகள் ராமேஸ்வரம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.