காவல் ஆணையர் அலுவலகத்தில் நுழைந்த 6 அடி நீளமுள்ள பாம்பு!

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்த 6 அடி நீளமுள்ள சாரைபாம்பை  வனத்துறையினர் பிடித்துச் சென்றனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில்  நுழைந்த 6 அடி நீளமுள்ள பாம்பு!

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்த 6 அடி நீளமுள்ள சாரைபாம்பை  வனத்துறையினர் பிடித்துச் சென்றனர்.

கடந்த ஆண்டு பெய்த கனமழையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. கடந்த ஒரு வருடமாக அப்படியே கிடந்த மரத்தை அகற்றும் பணி நேற்று துவங்கியது. அப்போது அங்கு பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு காவலர்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து பையில் போட்டு கொண்டு சென்றனர். பின்னர் பாம்பு வனப்பகுதியில் விடப்ப்ட்டது