தமிழ்நாட்டில் மீண்டும் வலுபெறும் கொரோனா...நேற்றைய பாதிப்பு மட்டும் இவ்வளவு?

தமிழ்நாட்டில் மீண்டும் வலுபெறும் கொரோனா...நேற்றைய பாதிப்பு மட்டும் இவ்வளவு?

தமிழ்நாட்டில் மேலும்,  401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் 401 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : கர்நாடகா: பாஜகவின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு...முதலமைச்சர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் தொகுதி என்ன?

சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அதேசமயம், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 198 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 301 ஆக உள்ளது.