21 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு...

21 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு...

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவு உயர்கல்வித்துறை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலராக காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்,சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலராக சுப்ரியா சாகு நியமிக்கப்பட்டுள்ளார்.வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலராக ஜோதி நிர்மலா சாமி ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சித்துறை முதன்மை செயலராக கே. கோபால் நியமனம்.

பொதுப்பணித்துறை கூடுதல் முதன்மை செயலராக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை முதன்மை செயலராக குமார் ஜெயந்த், நகர்புற வளர்ச்சி, வீட்டுவசதித்துறை முதன்மை செயலராக ஹித்தேஷ் குமார் மக்வானா நியமனம், நெஞ்சாலை மற்றும் துறை முகம் முதன்மை செயலராக கார்த்திகேயன்,வேளாண், விவசாய நலன்துறை ஆணையாளராக சமயமூர்த்தி நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா, கலாச்சார, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலராக சந்திரமோகன், தொழிலாளர் நலம் மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சி செயலராக கிர்லோஷ்குமார், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலத்துறை செயலாராக அருண்ராய்,போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலராக தயானந்த் கட்டாரியா, ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலராக மணிவாசன் நியமனம். பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிறபட்டோர் நலன் சிறுபான்மை நலத்துறை செயலராக கார்த்திக் நியமனம்,எரிசக்தித்துறை முதன்மை செயலராக தர்மேந்திரபிரதாய் யாதவ் நியமனம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலராக மைதிலி ராஜேந்திரன் நியமனம்,

சமூகநலன் மற்றும் மதிய உணவு திட்டத்துறை செயலராக ஷாம்பு, கலோலிகர், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலராக லால்வீனா,கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் காதி துறை செயலராக செல்வி அபூர்வை நியமித்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது.