2024 தேர்தல்; அரசியல் கட்சினருடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை!

நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் வருகின்ற 25ஆம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல்  அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் பணிகள் தீவிரம் காட்டி வருகின்றது.  குறிப்பாக, பூப் கமிட்டி அமைத்தல், வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் அமைத்து தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல அரசு சார்பாக  நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தேர்தலை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல்  போன்ற பணிகள் மேற்கொள்ளப்படடுகிறது. வரும் கின்ற 27 ஆம் தேதி தமிழக முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிட உள்ளது.

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை தலைமை செயலகளத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில்  வரும் 25 ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது. இதில்  வரைவு வாக்காளர் பட்டியலில் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். 

இதற்கிடையில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலிருந்து 43  ஐஏஎஸ் அதிகாரிகள்  மற்றும் 15 ஐபிஎஸ் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்க: சி.பி.எம் பேரணி; டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!