கோவையில் பரபர...கொரோனா பரவலுக்கு 2 பெண்கள் உயிரிழப்பு...!

கோவையில் பரபர...கொரோனா பரவலுக்கு 2 பெண்கள் உயிரிழப்பு...!

கோவையில் கொரோனாவிற்கு ஒரே நாளில் இரண்டு பெண்கள் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கோரோனா பாதிப்பு இருந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

இதையும் படிக்க : ஈஸ்டர் திருநாள் - முதலமைச்சர் வாழ்த்து...!

இதேபோல், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இப்படியாக கோவையில் கொரோனாவிற்கு ஒரே நாளில் இரண்டு பெண்கள் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது