சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த விவகாரம்...3 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த விவகாரம்...3 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகியுள்ள 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு சுரங்க பாதை அருகே சுவர் இடிக்கும் பணியின்போது இடிபாடுகள் விழுந்து பெண் வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கவனக்குறைவாக செயல்பட்ட பொக்லைன் ஆப்பரேட்டர் மற்றும் உரிமையாளர் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கட்டிட பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தக்கோரி கட்டிட உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்...!

அதனைதொடர்ந்து இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் சையத் அலி பாத்திமா, பொறியாளர் ஷேக் பாய், ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமான் ஆகியோர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.