11 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் தொல்லை... தலைமறைவான 2 பேருக்கு வலைவீச்சு...

திருச்செந்தூர் அருகே 11 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

11 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் தொல்லை... தலைமறைவான  2 பேருக்கு வலைவீச்சு...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயாமொழி தெற்குத் தெருவை சேர்ந்தவர் செந்தில். இவர்  பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் செந்திலும், ராமநாதபுரம் தெருவைச் சேர்ந்த பொன் சூர்யா ஆகிய இரண்டு பேரும் 11 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

இதற்கிடையே நடந்த சம்பவத்தை சிறுமி, தனது தாயிடம் கூறி கதறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்த பால் வியாபாரி உட்பட 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.