10, 12 வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை வெளியாக இருந்த 10 ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

10, 12 வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜுன் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருந்த நிலையில் வரும் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளும் வரும் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் மதியம் 12 மணியளவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை பள்ளிகல்வித்துறை இணையதளங்களில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.