மதுபானத்திற்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல்.... விற்பனையாளருடன் மதுப்பிரியர் வாக்குவாதம்...

சேலத்தில் மதுபானத்திற்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த விற்பனையாளருடன் மதுபிரியர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது 

மதுபானத்திற்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல்.... விற்பனையாளருடன் மதுப்பிரியர் வாக்குவாதம்...

சேலம் உடையாப்பட்டி பகுதியில்  இயங்கிவரும் டாஸ்மாக் கடையில் மதுபானத்திற்கு கூடுதலாக 10 ரூபாய் விற்பனையாளர் எடுத்துக்கொண்டதால் மதுப்பிரியர்  வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் மதுப்பிரியர் மதுபானத்தை வாங்கும் போது கூடுதலாக 10 ரூபாயை விற்பனையாளர் எடுத்துக் கொண்டதால், மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

உடனே விற்பனையாளர் மதுபாட்டிலை எடுத்து உள்ளே வைத்துக் கொள்கிறார். பின்னர் மதுப்பிரியருக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அதன் பின்னர் கூடுதலாக வசூலித்த பத்து ரூபாய் பணத்தையும், மதுபாட்டிலையும் எடுத்து  கொடுக்கிறார்.

தமிழக அரசு கூடுதலாக மதுபானத்திற்கு பணம் வசூலிக்க கூடாது என்று அறிவித்துள்ள நிலையில் பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்ததால்  வாக்குவாதம் ஏற்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.