ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!!

PM Modi starts various plans today

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளுக்கு பிரதமா் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
 
பிரதமா் நரேந்திர மோடி மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி ராஜஸ்தானின் சித்தூா்கா் பகுதிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி அங்கு மெஹசானா- பதிண்டா - குா்தாஸ்பூா் எரிவாயு குழாய் இணைப்பைத் தொடங்கி வைக்கிறார். அபு சாலையில், ஹிந்துதாஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் அமைத்துள்ள சமையல் எரிவாயு நிரப்பும் நிலையத்தைத் தொடங்கி வைக்கிறாா்.

மேலும், ஆயிரத்து 480 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தாரா - ஜலவா் - தீன்தா் பிரிவின் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். கோட்டாவில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்த வளாகம், பல்வேறு ரயில்வே திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 

தொடா்ந்து 11 ஆயிரத்து 895 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட டெல்லி - வதோதரா விரைவுச்சாலையை மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் தொடங்கி வைக்கவுள்ள மோடி, ஆயிரத்து 880 கோடி ரூபாய் மதிப்பிலான 5 சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஊரக மற்றும் நகா்புறப் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பா் - டிசம்பா் மாதங்களில் அந்த மாநிலங்களுக்குப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.