ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மாநாடு இன்று தொடங்கியது

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர மக்கள் வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்  கட்சியின் விஜயசாய் ரெட்டி கூறியுள்ளார்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மாநாடு இன்று தொடங்கியது

ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்குகிறது. இதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை  உறுப்பினரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான  விஜயசாய் ரெட்டி,   இந்த மாநாட்டில் கிராம உள்ளாட்சிப் பிரதிநதிகள் முதல் முதலமைச்சர் வரை கலந்து கொள்வார்கள் என்று  கூறியுள்ளார்.

முதல் நாள் மாநாட்டில் ஒன்றரை லட்சம் பேரும் இரண்டாவது நாளில் நான்கரை லட்சம் பேரும் பங்கேற்பார்கள் என்றும் இந்த மாநாடு  கட்சியின் மூன்றாவது மாநாடு என்றும், ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்ததிலிருந்து நடைபெறும் முதல் மாநாடு என்றும் அவர் கூறினார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர மக்கள் 14 ஆண்டுகள் வாய்ப்பு வழங்கியதாகவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார் என்றும் குறை கூறினார்.