என்னமா யோசிக்கிறாங்க.. பட்டையை கிளப்பும் "புஷ்பா சேலை" வியாபாரம்.. குஜராத்தில் அமோகம்

குஜராத்தில் "புஷ்பா சேலை" என தயாரிக்கப்பட்டு அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

என்னமா யோசிக்கிறாங்க.. பட்டையை கிளப்பும் "புஷ்பா சேலை" வியாபாரம்.. குஜராத்தில் அமோகம்

தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் மற்றும் இளைஞர்களில் கனவு கன்னியான நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் தான் "புஷ்பா".. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் 247 கோடி வசூலித்து படையை கிளப்பியுள்ளது. படத்தின் கவர்ச்சியான பாடல்களுக்கு நடனமாடுவது அல்லது அல்லு அர்ஜுனின் சின்னச் சின்ன வசனங்களை மீண்டும் உருவாக்குவது போன்ற வீடியோக்களால் இணையம் முழுவதும் நிரம்பியுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த சரண்பால் என்ற வடிவமைப்பாளர் புஷ்பா படத்தின் புகைப்படங்களால் அச்சிடப்பட்ட புடவைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

படத்தின் பிரபலத்தைப் பார்த்து சரண்பால் சிங்குக்கு தனித்துவமான யோசனை கிடைத்துள்ளது. இந்த புடவைகளை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் பின்னர், புஷ்பா சேலை வியாபாரம் கட்டியுள்ளது. இதுவரை 3000 சேலைகளை விற்பனை செய்துள்ளதாக சரண்பால் கூறியுள்ளார்.