தன்னிடம் பிழையை வைத்துக்கொண்டு ராகுல் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியதேன்?!!

தன்னிடம் பிழையை வைத்துக்கொண்டு ராகுல் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியதேன்?!!

2020ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி 113 முறை பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளதாக சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறையும் இதுபற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தெரிந்துகொள்க:   அமித் ஷாவிற்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்...காரணம் என்ன?!!

பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. பாதுகாப்பு குறைபாடு குறித்து புகார் தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கட்சியின் தலைவர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியிருந்தார்.  தற்போது இது தொடர்பாக மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையிடமிருந்து பதில் வந்துள்ளது.  

ராகுல் காந்தியின் பாதுகாப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை ராகுல் காந்தியே மீறியதாக சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.  இந்த பாதுகாப்பு மீறல்கள் குறித்து ராகுலிடம் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வந்தது எனவும் சிஆர்பிஎஃப் கூறியுள்ளது. மேலும் 2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ராகுல் காந்தி 113 முறை பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளதாக சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறையும் இதுபற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது எனவும் ஆனால் அவர் அதைக் கருத்தில் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   வெளிநாடுகளில் இந்திய சிரப்பால் குழந்தைகள் இறப்பா....பாஜக மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகிறதா காங்கிரஸ்...