ரபேல் விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ரபேல் விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக மீண்டும் விசாரிக்க கோரிய மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரான்ஸ் ஊடகத்தில் வெளியான செய்திகளை தொடர்ந்து வழக்குரைஞர் சர்மா, ரபேல் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரிக்க மனு தாக்கல் செய்தார். ரபேல் ஒப்பந்தத்தைபெறுவதற்காக இடைத்தரகர் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக பிரான்சில் தகவல் வெளியானது.

இதன் அடிப்படையில், ரபேல் ஒப்பந்தத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும், பிரான்ஸ் புலனாய்வாளர்களின் ஆவணங்களை வரவழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். தலைமை நீதிபதி யு.யு.லலித், ரவீந்திர பட் ஆகியோர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.