ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியிலிருந்து நடை பயணம்!

ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியிலிருந்து நடை பயணம்!

ராகுல் காந்தி தலைமையில், ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. பாரத் ஜோடோ என்ற பெயரில், கன்னியாகுமரியில் இருந்து இந்த பாதயாத்திரை தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்  சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி, 148 நாட்களுக்கு பாதயாத்திரைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணி, பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றுடன் 12 மாநிலங்கள் வழியே ஒரு நாளைக்கு 25 கிலோ மீட்டர் பயண தூரத்துடன் நடை பயணம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.