திருக்குறள் எழுதி உலக சாதனை படைத்த புதுச்சேரி மாணவி!

திருக்குறள் எழுதி உலக சாதனை படைத்த புதுச்சேரி மாணவி!

புதுச்சேரியில் தமிழ்  நூல்கள், காப்பியங்களை அனைவரும் படித்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் கல்லூரி மாணவி ஒருவர் 15 செ.மீ X 42 செ.மீ அளவில் உள்ள சிறிய காகிதத்தில் 12 மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் எழுதி உலக சாதனை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

இக்காலகட்டத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியங்கள், திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களை கற்றுக்கொள்ள இன்றைய தலைமுறையினரிடையே ஆர்வம் குறைந்துள்ளது.

இதை போக்கும் வகையிலும் அனைவரும் தமிழ் காப்பியங்களையும், வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவி ஸ்ரீ கஜலட்சுமி என்பவர் சிறிய பேப்பரில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்து விரிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள ரெசிடென்சி பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 15 செ.மீ. X 42 செ.மீ அளவில் உள்ள சிறிய காகிதத்தில் 12 மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் எழுதி உலக சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து  உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.

இது தொடர்பான வீடியோவை பாருங்கள்....