மத்திய அமைச்சர் டுவிட்டர் கணக்கு முடக்கம்.. ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணமா..?

மத்திய அமைச்சர் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

மத்திய அமைச்சர் டுவிட்டர் கணக்கு முடக்கம்.. ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணமா..?

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு நேற்று ஒரு மணி நேரத்திற்கு முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டுவிட்டர் விளக்கமளித்தது.

இந்த நிலையில் அமைச்சரின் டுவிட்டர் கணக்கு ஒரு மணி நேரம் முடக்கம் செய்யப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் ஒன்றுதான் காரணம் என்ற விவரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஏ. ஆர்  ரகுமானின் மா துஜே சலாம் என்ற பாடலின் வீடியோ ஒன்றை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் பயன்படுத்தியுள்ளார். இது காப்புரிமை பெறப்பட்ட வீடியோவாம். இதன் காரணமாகத்தான் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாம்.