இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு குறித்த செய்தித் தொகுப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு குறித்த செய்தித் தொகுப்பு!

கனமழை காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில்  வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த செய்தித் தொகுப்பு.

1.இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காணாமல் போயுள்ளனர். படத்தில்: குலு மாவட்டத்தில் உள்ள பன்வி கிராமத்தில், மழைக்காலத்தில் சேதமடைந்த கட்டிடத்தின் அருகே குப்பைகள் தரையில் கிடக்கின்றன.கனமழை காரணமாக காங்க்ராவில் உள்ள ரயில் பாலம் இடிந்து விழுந்தது. 800 மீட்டர் நீளமுள்ள குறுகலான பாதை சாக்கி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. தண்ணீரின் விசையால் வலுவிழந்த தூண்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

2.இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி, காங்க்ரா மற்றும் சம்பா மாவட்டங்களில் அதிகபட்ச சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. படத்தில்: மண்டி அருகே, கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால், பாறைகள் விழுந்து சேதமடைந்த லாரி.

3.இமாச்சலத்தில் இருந்து இதுவரை கனமழையால் பாதிக்கப்பட்டது தொடர்பான 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

4,திடீர் வெள்ளம் மற்றும் பல நிலச்சரிவுகளைத் தொடர்ந்து மண்டி மாவட்டத்தில் பல சாலைகளும் தடைப்பட்டுள்ளன. படம்: மண்டியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த வாகனங்கள்.

5.சம்பா பகுதியில் பானெட் கிராமத்தில் அதிகாலை 4.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. படம்: சம்பா மாவட்டத்தில், கனமழை பெய்ததைத் தொடர்ந்து, பள்ளத்தாக்கில் விழுந்த ஒரு பஸ், குன்றின் விளிம்பில் இருந்து தப்பித்தது.