மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது!

மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நேற்று திடீரென சிலர் கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.    மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் கல்வீசி இந்த தாக்குதலில் ஈடுபட்டது. இதில் அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. மேலும் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்தன.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மாவட்ட கமிட்டி அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 20-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த லால், சதீர்த்தியன்,ஹரிசங்கர் என தெரிய வந்தது. அவர்களை தாம்பனூர் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கம்யூனிஸ்டு அலுவலகம் மீதான தாக்குதலுக்கு முதல் நாள் வஞ்சியூரில் சி.பி.எம். செயல்பாட்டாளர்களுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.