பொருட்களை திருடி செல்லும் பெண்கள்...! சிசிடிவியில் பதிவான காட்சிகள்...!

பொருட்களை திருடி செல்லும் பெண்கள்...! சிசிடிவியில் பதிவான காட்சிகள்...!

புதுச்சேரி அருமாத்தபுரம் பகுதியில் உள்ள ஒரு பல் பொருள் அங்காடியில் நேற்று  முன்தினம் இரவு ஒரு மூதாட்டி மற்றும் அவருடன் ஒரு பெண் அங்காடிக்குள் நுழைந்து நெய் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த  இடத்திற்கு சென்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஐந்து நெய் பாட்டில்களை சேலைக்குள் வைத்து மறைத்து எடுத்துச் செல்கின்றனர், இது அங்காடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக அங்காடி உரிமையாளர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.