அதானி விவகாரத்தில் தொடர்ந்து குரலெழுப்புவோம் - ராகுல்காந்தி!

அதானி விவகாரத்தில் தொடர்ந்து குரலெழுப்புவோம் - ராகுல்காந்தி!

உண்மை வெளிவரும் வரை, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வியெழுப்புவோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாட்டின் இறுதிநாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது பெண்களின் வலியை உணர்ந்ததாக குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : இனி திருப்பதியில் லட்டு வழங்குவதில் புதிய உத்தரவு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினால், அரசும் மத்திய அமைச்சர்களும் அவரை பாதுகாக்கும் வகையிலேயே பேசியதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, மக்களுடன் இணைய காங்கிரஸ் மேலும் வலுவடைந்து வருவதாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக பணிபுரிவதை விடுத்து புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு ஏவி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.