விஷ்வ இந்து பரிஷத் போராட்டம் அறிவிப்பு; போலீஸ் குவிப்பு...!

விஷ்வ இந்து பரிஷத் போராட்டம் அறிவிப்பு; போலீஸ் குவிப்பு...!

ஹரியானா கலவரத்தைக் கண்டித்து டெல்லியில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிசத் நடத்திய யாத்திரையில் கல்வீசப்பட்டதால் கலவரம் வெடித்தது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள நிர்மான் விகார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் சார்பில் முற்றுகைப் போராட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விகாஸ் மார்க் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க   | "வாஷிங்டன் செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா?" கார்கே சரமாரி கேள்வி!