திருப்பதி கோவிலுக்கு வி.ஐ.பி. தரிசனத்தில் செல்வோருக்கான ஒரு முக்கிய அறிவிப்பு!!

திருப்பதி கோவிலுக்கு வி.ஐ.பி. தரிசனத்தில் செல்வோருக்கான ஒரு முக்கிய அறிவிப்பு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வாரத்தில் 3 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் இலவச தரிசனம், 300 ரூபாய் கட்டணம், வி.ஐ.பி. கட்டண தரிசனம் ஆகியவற்றின் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலவச தரிசனத்தில் செல்லும்  பக்தர்களுக்கு முன்னுரிைமை அளிக்கும் வகையில் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிபாரிசு கடிதத்தில் ஒதுக்கப்பட்ட வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது.

மேலும் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தரிசன நேரத்தை தினமும் 2 மணிநேரம் கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளதாக  தேவஸ்தானம் தொிவித்துள்ளது.