உ.பி : பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து...! 3 பேர் பலியான சோகம்...

உ.பி : பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து...! 3 பேர் பலியான சோகம்...

உத்திரபிரதேச மாநிலத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது. 

உத்திரபிரதேச மாநிலம், நொய்டா பகுதியின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்த நொய்டா காவல்துறையினர், பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பேருந்தில் பயணித்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.     
 
இதையும் படிக்க : பாஜகவின் புதிய பதவியில் இயக்குனர் பேரரசு...!