புதுச்சேரி எம்.எல்.ஏக்கு பிரான்சில் இருந்து வந்த மிரட்டல் கடிதம்....

புதுச்சேரி எம்.எல்.ஏக்கு பிரான்சில் இருந்து வந்த மிரட்டல் கடிதம்....

புதுச்சேரி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்க்கு பிரான்சில் இருந்து கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார். இவருக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒரு கடிதம் வந்ததுள்ளது.  அந்த கடிதத்தில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினரையும் பொங்கல் தினத்திற்குள் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது, இதனால் அதிர்ச்சியடைந்த சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் இது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில்  அளித்த புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும்  கடந்த மாதம் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில்  உள்ள கண்காணிப்பு கேமரா அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளை நோக்கி இருப்பதாக புகார் கூறப்பட்டது, இது தொடர்பாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் அந்த ஹோட்டலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அதிகாரிகள் விடுதிக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதன் பின்னர் அந்த விடுதியின் உரிமையாளர் பாலா சினிவாசன் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து தான் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் போலீசார் இந்த கடிதத்தை அவர் அனுப்பி இருக்க கூடுமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:  தவறு ஒரு இடம்....தண்டனை ஒரு இடம்...சரியான நடவடிக்கை எடுக்குமா கர்நாடக அரசு...