சாமியை மண்டியிட்டு வணங்கி உண்டியலை கொள்ளையடித்த திருடன்...

பெங்களூரு அருகே மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், சாமியை மண்டியிட்டு வணங்கி, உண்டியலை திருடிச் சென்றது சி.வி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.

சாமியை மண்டியிட்டு வணங்கி உண்டியலை கொள்ளையடித்த திருடன்...

பெங்களூரு அருகே மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், சாமியை மண்டியிட்டு வணங்கி, உண்டியலை திருடிச் சென்றது சி.வி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை ஒட்டியுள்ள நெலமங்களம் அருகே தாபஸ்பேட்டையில் மாரியம்மன் கோயில்  அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள உண்டியல் திருடுபோனது.

இதனைத் தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிப் பதிவை ஆய்வு செய்தபோது, கோயிலுக்குள் வந்த மர்ம நபர்கள் சிலர், சாமியிடம் மண்டியிட்டு, வேண்டுதல் செய்து, பின்னர் கோயில் உண்டியலை கோணிப்பையால் மூடி தூக்கிச் சென்ற காட்சி பாதிவாகியிருந்தது. கொள்ளையர்களின் இந்த நூதன திருட்டு தற்போது வைரலாகி வருகிறது.