வடமாநில தொழிலாளர்களிடம் பதற்றம் குறைந்திருப்பதாக பீகார் குழுவினர் அறிவிப்பு!

வடமாநில தொழிலாளர்களிடம் பதற்றம் குறைந்திருப்பதாக பீகார் குழுவினர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள பீகார் தொழிலாளர்களிடம் பதற்றம் குறைந்திருப்பதாக, பீகார் மாநில கிராமப்புற மேம்பாட்டு துறை செயலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பரவிய வதந்தி குறித்து ஆய்வு செய்ய, இரண்டு தினங்களுக்கு முன்பு, பீகார் குழுவினர் தமிழ்நாடு வந்தடைந்தனர். சென்னை புரசைவாக்கத்தில் வட மாநில தொழிலாளர்களை சந்தித்த குழுவினர், கள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

இதையும் படிக்க : தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - முதலமைச்சர்!

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநில கிராமப்புற மேம்பாட்டு துறை செயலர் பாலமுருகன், தமிழ்நாட்டில் உள்ள பீகார் தொழிலாளர்களிடம் பதற்றம் குறைந்திருப்பதாகவும், பீகார் - தமிழ்நாடு அரசு இணைந்து சிறப்பாக செயலாற்றியதாகவும் தெரிவித்தார்.