இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்றால் பொதுமக்கள் அதிர்ச்சி...

மகாராஷ்டிராவில் புதிதாக மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்றால் பொதுமக்கள் அதிர்ச்சி...

இந்தியாவில், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் தான் ஒமிக்ரான் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், மகாராஷ்டிராவில் இதுவரை 20 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதிதாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள 8 பேரில், 7 பேர் மும்பையை  சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் ஒமிக்கிரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.