ரிக்சா ஓட்டுநருக்கு சொத்துக்களை எழுதிவைத்த மூதாட்டி... காரணம் என்ன தெரியுமா..?

ஒடிசா மாநிலத்தில் 63 வயது மூதாட்டி, தமது சொத்துக்கள் அனைத்தையும் ரிக்சா ஓட்டுநருக்கு எழுதி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிக்சா ஓட்டுநருக்கு சொத்துக்களை எழுதிவைத்த மூதாட்டி... காரணம் என்ன தெரியுமா..?

தாஹத் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மினாடியின் கணவர் கிருஷ்ணகுமார் பட்நாயக், கடந்த ஆண்டு உயிரிழந்து விட்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரது மகள் மாரடைப்பால் காலமாகி விட்டார். இதனால் மூதாட்டி மினாடி மட்டும் தனியாக வசித்து வருகிறார். 

நிறைய நகைகள், 3 அடுக்கு மாடி வீடு என 1 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துக்கள் இருந்தும், அவருக்கு உதவி செய்ய உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் வேதனையில் இருந்து வந்த மூதாட்டிக்கு, ரிக்சா ஓட்டுநர் புத்தா சமால் ஆறுதலாக இருந்து உதவிகள் செய்து வந்துள்ளார்.

இதனால் ஒரு முடிவெடுத்த அந்த மூதாட்டி, தம்மிடம் இருந்த நகைகளை அந்த ரிக்சா ஓட்டுநருக்கு கொடுத்துவிட்டு, 3 அடுக்குமாடி வீடு மற்றும் மீதமிருந்த சொத்துகளையும் அவரது பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.